கோலாகலமாக துவங்கிய தமிழ் இசை விழா
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நகரில் மூன்று நாள் தமிழ் இசை விழா ஞாயிற்றுக்கிழமை மாலை துவங்கியது.
154-வது தியாகராஜ ஆராதனை விழா திங்கள்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், தமிழ் இசை விழாகோலாகலமாக துவங்கியுள்ளது.
காவிரி ஆற்றின் கரையோரம், இசை மணம் கமழும் திருவையாறில், தமிழ் இசை விழா ஆண்டுதோறும் நடந்துவருகிறது. டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இங்கு இசைக் கலைஞர்கள் கூட்டம் அலைமோதும்.
டிசம்பர் மாதம் நடைபெறும் இசை விழாக்கள், தியாகராஜ ஆராதனை விழா என திருவையாறே அமர்க்களப்படும்.இதைத் தொடர்ந்து தமிழ் இசை மன்றம் சார்பில் நடத்தப்படும் தமிழ் இசை விழாவும் கோலாகலமாக நடத்தப்படும்.
இந்த ஆண்டுக்கான தமிழ் இசை விழாவை, மாநில ஊராட்சித் துறை அமைச்சர் கோ.சி.மணி, ஞாயிற்றுக்கிழமைகுத்துவிளக்கு ஏற்றி வைத்துத் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தமிழ் இசை விழாவுக்காக முதல்வர் கருணாநிதி ரூ. 1 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார்.இந்த நிகழ்ச்சி மூலம் கர்நாடக இசையும், பரதநாட்டியக் கலையும் பிரபலப்படுத்தப்பட வேண்டும் என்று முதல்வர்விரும்புகிறார்.
இனிமேல் ஆண்டுதோறும் இந்த நிதியுதவி அளிக்கப்படும் என்றார் அமைச்சர் மணி.
யு.என்.ஐ.