ரூ. 100 கோடியில் "பயோ டெக்னாலஜி பூங்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் ரூ. 100 கோடி மதிப்பில் பயோ டெக்னாலஜி பூங்கா அமைப்பதற்கானஒப்பந்தம் சென்னையில் திங்கள்கிழமை கையெழுத்தானது.

தமிழக அரசின் சிறு தொழில் கழகமான டிட்கோ மற்றும் அமெரிக்காவின் கார்னல்பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கிடையே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

டிட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான எம்.மாதவன் நம்பியார் மற்றும்கார்னல் பல்கலைக்கழகத்தின் சார்பில் பேராசிரியர் கே.வி.ராமன் ஆகியோர் இந்தஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். முதல்வர் கருணாநிதி முன்னிலையில், தலைமைச்செயலகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசின் புதிய பயோ டெக்னாலஜிகொள்கையை முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம்கையெழுத்திடப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு செய்தியாளர்களிடம் மாதவன் நம்பியார்பேசுகையில், பயோ டெக்னாலஜி துறையில் ஆய்வு, சிறு தொழில்துறையில் பயோடெக்னாலஜியின் பயன்பாடு ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு இந்த பூங்காசெயல்படும் என்றார்.

ஆய்வு நிறுவனங்களுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் இடையே நல்லஒத்துழைப்பை ஏற்படுத்தவும் இந்த பூங்கா பாடுபடும் என்று பேராசிரியர் ராமன்தெரிவித்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+