மனைவியை விவாகரத்து செய்தார் போரிஸ் பெக்கர்
மியூனிச்:
ஜெர்மனி நாட்டு டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர், மனைவி பார்பராவை விவாகரத்து செய்து விட்டார்.அதிகாரப்பூர்வமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி நீதிமன்றம் ஒன்றில் பெக்கரும், பார்பராவும் விவாகரத்து கேட்டு மனு செய்திருந்தனர். இந்த மனு மீதானதீர்ப்பு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது. இதன்படி பெக்கர், பார்பராவுக்கு விவாகரத்து அளிக்கப்பட்டது.
பெக்கரும், பார்பராவும் கருத்து வேறுபாடு கொண்டனர். இது, டிசம்பர் 9-ம் தேதி பத்திரிகைகளில் செய்தியாகவந்தது. தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள வீட்டுக்குச்சென்று விட்டார் பார்பரா. இதையடுத்து டிசம்பர் 15-ம் தேதி விவாகரத்து கோரி பெக்கர் மனு செய்தார்.
பார்பராவும் மியாமி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த நிலையில் இருவரும் கோர்ட்டுக்கு வெளியேஉடன்பாடு செய்து கொண்டனர். இதன்படி, இரு குழந்தைகளையும் வளர்க்கு பொறுப்பை இருவரும் சரிபாதியாகபகிர்ந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதுதவிர, ஆண்டுக்கு ரூ. 64.35 கோடி ஜீவனாம்சம் தரவும்பெக்கர் ஒத்துக் கொண்டார் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் ஜெர்மனி நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து அளிப்பதாக தீர்ப்பு அளித்துள்ளது.