ஹெராயின் பறிமுதல் .. விசாரணைக்கு பாண்டி. அரசு உத்தரவு
பாண்டிச்சேரி:
சென்னையிலுள்ள பாண்டிச்சேரி அரசு விருந்தினர் இல்லத்தில் ரூ. 2 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பிடிபட்டது குறித்து முழு அளவிலான விசாரணை நடத்த பாண்டிச்சேரி யூனியன் பிரதேச அரசுஉத்தரவிட்டுள்ளது.
பாண்டிச்சேரி அரசு விருந்தினர் இல்லத்தில் ஹெராயின் பதுக்கி வைத்திருந்ததாக 2 பேரை திங்கள்கிழமை சென்னைபோலீஸார் கைது செய்தனர். அவர்களடமிருந்து ரூ. 2 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள்கைப்பற்றப்பட்டது.
இந்தப் பிரச்சினை பாண்டிச்சேரியில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில் ஹெராயின் பிடிபட்டதுகுறித்து விரிவான விசாரணை நடத்த பாண்டி. அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பாண்டிச்சேரி அரசின் இணைச் செயலாளர் தேவந்திதாஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தவிவகாரம் குறித்து அரசு சீரியஸாக உள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் போலீஸார்விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு எஸ்.பி.க்குஉத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications