For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகள் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் சாவு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பலாய் மற்றும் யானை இறவு ஆகிய பகுதிகளில்ராணுவ வீரர்கள் நடத்திய திடீர் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 26 வீரர்கள் காயமடைந்தனர்.

ராணுவச் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சனத் கருணாரத்னே இதுகுறித்துக் கூறுகையில், கின்ஹாரா-9 என்றுபெயரிடப்பட்ட இந்த தாக்குதல் உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணிக்குத் துவங்கியது. கிலாய்-எழுத்துமட்டுவால்-நாகர்கோவில் மார்க்கத்தில் உள்ள பாதுகாப்பு அரணைத் தாண்டி ராணுவத்தினர் முன்னேறி தாக்குதலில்ஈடுபட்டனர்.

ராணுவ வீரர்களை எதிர்த்து விடுதலைப் புலிகள் தரப்பில் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவத்திற்குஆதரவாக விமானப்படையும் தாக்குதலில் ஈடுபட்டது.

மோதலில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் தவிர பொதுமக்கள் தரப்பிலும் ஒருவர்கொல்லப்பட்டார். மொத்தம் 26 வீரர்கள் காயமடைந்தனர்.

கின்ஹாரா தாக்குதலின்போது, டிசம்பர் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 139 சதுர கிலோமீட்டர்அளவிலான பரப்பை, ராணுவம், புலிகளிடமிருந்து கைப்பற்றியுள்ளது. இதுதவிர, யாழ்ப்பாணம்-யானை இறவுநெடுஞ்சாலையில், எழுத்துமட்டுவில் வரை மொத்தம் 32 கிலோமீட்டர் தொலைவிலான சாலையையும்புலிகளிடமிருந்து ராணுவம் கைப்பற்றியுள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X