For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகர ஜோதி .. நெரிசலில் தமிழக பக்தர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

சபரிமலை:

சபரி மலையில், மகரஜோதியை தரிசிக்க வந்த தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர்கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

சில நாட்களுக்கு முன் மண்டல பூஜை கூட்ட நெரிசலில் வயதான மூதாட்டி ஒருவர்இறந்து போனார். தற்போது மகர ஜோதி கூட்ட நெரிசலில் 15 வயதான தமிழக பக்தர்இறந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை சபரிமலையில் மகரஜோதி தரிசனத்திற்காக லட்சக்கணக்கான மக்கள்சபரிமலையில் கூடியிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலரும் சிக்கிக்கொண்டனர். இந்த கூட்ட நெரிசலில் ராஜபாளையத்தைச் சேர்ந்த அழகேசன் என்ற 15வயது பக்தர் படுகாயமடைந்தார்.

இவர் சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால்அவர் சிகிச்சை பலனிற்றி இறந்து விட்டார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அகிலேஷ் (25) என்ற பக்தரும் உயிருக்கு ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X