ஜல்லிக்கட்டு .. மாடு முட்டி 2 பேர் பலி
வத்திராயிருப்பு:
தமிழகத்தில் இரண்டு இடங்களில் நடந்த காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டில் மாடு முட்டி 2 பேர் இறந்தனர். 60 பேர் காயமடைந்தனர்.
பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாளான மாட்டுப் பொங்கலன்று தமிழகத்தின் பலபகுதிகளிலும் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டு பலவருட்களாக நடந்து வருகிறது.
வழக்கம் போல் இந்த ஆண்டும் திங்கள் கிழமை விருதுநகர் மாவட்டம்வத்திராயிருப்புக்கு அருகே உள்ள கூமாபட்டியில் ஜல்லிக்கட்டு நடந்தது.இலந்தைகுளம், ஆகாசம்பட்டி, அகத்தாபட்டி, வத்திராயிருப்பு கிராமங்களிலிருந்து50-க்கும் அதிகமான காளைகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டன.
இந்த வீர விளையாட்டை காண பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். அந்த சமயம்காளை ஒன்று கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் பாய்ந்தது. இதில் இலந்தைகுளம்கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு (35) என்ப வரின் நெஞ்சை காளை குத்திக் கிழித்தது.மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்து போனார்.
கான்சாபுரத்தைச் சேர்ந்த கருப்பையா (40) படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைபலனின்றி மருத்துமனையில் இறந்தார். காளை முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் பாலமேடு என்ற இடத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி 50பேர் படுகாயமடைந்தனர். இதில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.