வாக்காளர் பட்டியல் பிப்ரவரியில் தயார்
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம்தயாராகிவிடும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
வரவிருக்கும் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் இரண்டாவதுவாரத்திலோ அல்லது மூன்றாவது வாரத்திலோ முடிவு செய்யப்படும் எனசென்னையில், தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி தெரிவித்துள்ளார்.
இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் முன் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டையை பெறுவதற்கான இறுதி வாய்ப்பும் வழங்கப்படும்எனவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் இருக்கும் மொத்த வாக்காளர்களில் 64 சதவிகிதம் பேருக்கு வாக்காளர்அடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ளவர்களுக்கு அடையாளஅட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. அடையாள அட்டை தேர்தலின் போதுகட்டாயமாக்கப்படும். அடையாள அட்டை இல்லாமல் யாரும் வாக்களிக்க முடியாது.
தேர்தல் கமிஷனின் பொன் விழாவில் கலந்து கொள்வதற்காக நான் புதன்கிழமைடெல்லி செல்கிறேன் என அவர் கூறினார்.
யு.என்.ஐ.