ஊருக்குள் வராத பஸ் .. நாகர்கோவில் மக்கள் கொதிப்பு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
பல ஆண்டுகளாக பஸ் வசதி கேட்டு வந்த மக்கள் பஸ் வசதி கிடைக்காததால் பஸ்களைசிறை பிடித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அருகில் இருப்பது இறைவன்துறை. இந்தஊர் மக்கள் பஸ் வசதி கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இவர்கள் கோரிக்கைகள் அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் கவனிக்கப்படாமல்இருந்து வந்தது.
இதனால் கோபமடைந்த இந்த ஊர் மக்கள் செவ்வாய்க்கிழமை அந்த பகுதிநெடுஞ்சாலையில் வந்த 6 பஸ்களை சிறை பிடித்தனர். தகவல் அறிந்து வந்தஅதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின் மக்கள் சிறை பிடித்த பஸ்களை விடுவித்தனர்.












Click it and Unblock the Notifications