சரணடைந்தார் மிசா. பாண்டியன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த மதுரை துணை மேயர் மிசா. பாண்டியன், செங்கல்பட்டுமாஜிஸ்திரேட் கோர்ட்டில், புதன்கிழமை காலை சரண் அடைந்தார்.
செங்கல்பட்டு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (2) முன்பு மிசா. பாண்டியன் சரண் அடைந்ததாக போலீஸ் தரப்பில்தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, மதுரையைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மிசா. பாண்டியனைபோலீஸார் தேடி வந்தனர். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸில் சரணடைந்த வரிச்சியூர் செல்வம் என்பவர்அளித்த வாக்குமூலத்தில், மிசா. பாண்டியன் கூறித்தான், தானும் இன்னும் சிலரும் இந்த கொலையைச் செய்ததாகதெரிவித்திருந்தார்.
கடந்த ஒரு மாதமாக மிசா. பாண்டியன் தலைமறைவாக இருந்தார். திருச்சி, தஞ்சாவூர், மைசூர் என பல்வேறுஇடங்களுக்குச் சென்ற அவர் தற்போது கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications