வன அலுவலக கொள்ளை .. விசாரணை தீவிரம்
நாமக்கல்:
நாமக்கல் வனச் சரக அலுவலகத்தில் ஆயுதம் தாங்கிய கும்பல் நுழைந்துதுப்பாக்கிகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்த விசாரணைதுவங்கியுள்ளது.
நாமக்கல் அருகே உள்ள வள்ளிபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனச் சரகஅலுவலகத்தை ஒரு கும்பல் முற்றுகையிட்டது. அங்கிருந்த ஊழியர்களைக் கட்டிப்போட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கொள்ளையடித்துச் சென்றது
அவர்கள் வீரப்பன் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று கருதப்பட்டது.ஆனால், வீரப்பனைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வரும்போது, இவ்வளதுதுணிச்சலாக வீரப்பன் கொள்ளையில் ஈடுபட்டிருக்க முடியாது. மேலும், காட்டுக்குள்இருப்பது தான் வீரப்பனுக்குப் பாதுகாப்பு எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த சம்பவம் நடக்கும் முன்பு வனத் துறையினர் நடத்திய சாராயரெய்டைத் தொடர்ந்து, ஆத்திரம் கொண்ட கும்பல் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம்என தெரிய வந்துள்ளது. எனவே, துறையூர், உப்பிலியாபுரம், திருச்சி ஆகியஇடங்களில் விசாரணை நடந்து வருகிறது.
விரைவில் இந்த சம்பவத்தில் துப்புத் துலங்கும் என அதிகாரிகள் நம்பிக்கைதெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த வனச் சரகர்கள் கருணாநிதி,சின்னப்பையன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications