பாண்டி.யில் எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சியின் நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் 85-வது பிறந்த நாள்பாண்டிச்சேரியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பாண்டிச்சேரி முதல்வர் ப.சண்முகம், பாண்டிச்சேரி அரசு சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார்.
அதிமுக தொண்டர்கள், தலைவர்கள், கட்சித் தலைவர் ரவீந்திரன், எம்.எல்.ஏ நடராஜன் தலைமையில் ஊர்வலமாகசென்று எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்தனர். ஏழை மக்களுக்கு இலவச வேட்டி, இனிப்புகளையும்அவர்கள் வழங்கினர்.
எம்.ஜி.ஆர். கழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவற்றின் தலைவர்களும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications