புலிகளிடம் பலமுனை தாக்குதல் ராக்கெட்டுகள்?
கொழும்பு:
வடக்கு யாழ்ப்பாணத்தில் இரு தினங்களுக்கு முன் நடந்த கினிஹாரா 9 என்ற தாக்குதலில் விடுதலைப்புலிகள் பல முனைகளில் தாக்கக் கூடியராக்கெட்டுக்களைப் பயன்படுத்தியதாக ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில், 1999 ம் ஆண்டு ராணுவ வீரர்கள் அதி நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள்.ஆனால், அதற்கு முன்பே விடுதலைப்புலிகள் அதி நவீன ஆயுதங்களை வாங்கி விட்டார்கள். அந்த ஆயுதங்களை வைத்து அவர்கள் தற்போது தாக்குதல்நடத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கிலாலி மற்றும் எலுத்திமடுவில் பகுதிகளில் ராணுவ வீரர்கள், விடுதலைப்புலிகளை நோக்கி கினிஹாரா 9 என்ற தாக்குதலைநடத்தினார்கள். கடந்த இரண்டு நாட்களாக விடுதலைப்புலிகளும் இந்தத் தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
கினிஹாரா - 9 தாக்குதலில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 52 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 5 ராணுவ அதிகாரிகளும் 227ராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.
யானையிறவு பகுதி நோக்கிச் செல்லும் அவரக்காடு பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 6 விடுதலைப்புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அங்கிருந்து புலிகள் விட்டுச் சென்ற 21 டி 56 துப்பாக்கிகளை ராணுவ வீரர்கள் பறிமுதல் செய்தனர் என்றார்.
ஆனால் கடந்த இரண்டு நாட்கள் நடந்த தாக்குதல் குறித்து புலிகள் கூறுகையில், இரண்டு நாள் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளனர்.
அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விடுதலைப்புலிகள் தங்களிடம் உள்ள அனைத்து விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தினார்கள். அவர்கள்இதுபோன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தும் போது, அவர்கள் மிகப்பெரிய தாக்குதலுக்குத் தயாராகி விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஆர்ட்டிலரி மற்றும் மார்ட்டர் குண்டுகள் வைத்துத் தாக்குதல் நடத்தியதால்தான் 50 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இறந்து விட்டனர் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளுக்கு ஆதரவாகப் போராட்டம்:
இதற்கிடையே விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள சண்டைநிறுத்தத்திற்கு அரசு சாதகமான பதில் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 5000 க்கும்மேற்பட்ட மாணவர்கள், சமூக சேவை நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன் கூடி போராட்டம் வியாழக்கிழமைபோராட்டம் நடத்தினார்கள். இவர்களில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பிரச்சாரத்தில் ஈடுபட்டது தொடர்பாக 13 மாணவர்களைப் போலீஸார்கைது செய்தனர்.
யு.என்.ஐ.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications