கர்நாடகம் வருகிறார் வாஜ்பாய்
பெங்களூர்:
பிரதமர் வாஜ்பாய் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகத்துக்கு வியாழக்கிழமை வருகிறார்.
டெல்லியிலிருந்து பிரதமர் வாஜ்பாய் தனி விமானம் மூலம் புறப்பட்டு வியாழக்கிழமை மாலை 4.45. மணிக்கு மங்களூர் வருகிறார். அங்கிருந்துஹெலிகாப்டர் மூலம் உடுப்பி செல்கிறார். அங்கு பாரதீய ஜனதா கட்சி சார்பில் நடக்கும் ஊழியர் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
பின்னர் கிருஷ்ணன் கோவிலைச் சுற்றிப் பார்க்கிறார். அங்கு ராஜாங்கனா சபாங்கனா அரங்கைத் திறந்து வைக்கிறார்.
19 ம் தேதி வெள்ளிக்கிழமை காலை உடுப்பியிலிருந்து புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மங்களூர் செல்கிறார். பின்னர் அங்கிருந்து விமானம்மூலம் காலை 11.15 மணிக்கு பெங்களூர் வருகிறார். பெங்களூரில் ஆதிசுஞ்சனகிரி மகாசமஸ்தான மடம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வித்யா சவுதாஎன்ற பள்ளியைத் திறந்து வைக்கிறார். பின்னர் இன்போசிஸ் நிறுவனத்தை அவர் பார்வையிடுகிறார்.
பின்னர் ஒயிட்பீல்டு செல்லும் அவர் அங்கு ஸ்ரீசத்யசாய் இன்ஸ்டிடியூட் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன மருத்துவமனையை திறந்து வைக்கிறார். பின்னர்கவர்னர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
விதானசவுதா வரவேற்பு மண்டபத்தில் மாலை 5.15. மணிக்கு பெங்களூர் சர்வதேச விமான நிலைய அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. அதில் பிரதமர்வாஜ்பாய் கலந்து கொள்கிறார். வெள்ளிக்கிழமை இரவு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.












Click it and Unblock the Notifications