விமோச்சனம் வந்தது மலேசியப் பெண்களுக்கு
கோலாலம்பூர்:
மலேசியப் பெண்களுக்கு ஊக்கம் தரும் வகையில், முதல் முறையாக ஒரு இளம் பெண் அந்நாட்டின் பெண்கள்விவகாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷாஹ்ரிஸாட் ஜலீல் என்பவர்தான் அந்தப் பெருமைக்குரியவர். இஸ்லாமிய நாடான மலேசியாவில், பெண்கள்உயர் பதவிக்கு வருவது மிகவும் அரிதானது. ஆனால் சமீப காலமாக இஸ்லாமியச் சட்டங்களில் பல்வேறுதளர்வுகளைக் கொண்டு வந்துள்ளது. ஆடை அணிவது, சட்டம் போன்றவற்றில் பல கெடுபிடியான அம்சங்கள்தளர்த்தப்பட்டு வருகின்றன.
இஸ்லாமிய பெண்கள் சமத்துவ அமைப்பைச் சேர்ந்த ஷரிபா சூரியா அல்ஜெப்ரி கூறுகையில், இறுதியாக எங்களதுகருத்துக்களை பிரதமர் மதித்துள்ளார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களது உணர்வுகள், ஏக்கங்கள்,கருத்துக்களை பிரதமர் புரிந்து கொண்டுள்ளது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.
கடந்த மாதம், அய்னும் முகம்மது சாய்த் என்ற பெண், நாட்டின் முதலாவது பெண் அட்டர்னி ஜெனரலாகநியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியாவின் சொலிசிட்டர் ஜெனரல் (தலைமை வக்கீல்), மத்தியவங்கியின் கவர்னர் ஆகியோரும் பெண்களே.
பெண்கள் மயமாகி வரும் நிர்வாகம் குறித்து பிரதமர் மகாதீர் முகம்மது கூறுகையில், ஆண்களை விட சிறப்பாகசெயல்படுவார்கள் என்பதால்தான் பெண்களை முக்கிய பதவிகளில் அமர்த்துகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications