பாக். குடன் ஹாக்கி விளையாட இந்தியாவுக்கு அனுமதி கிடைக்குமா?
துபாய்:
துபாயில், இந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதத்தில் நடைபெற இருக்கும் ஹாக்கிபோட்டியில் பங்கேற்பதற்கு இந்திய அரசின் அனுமதிக்காக இந்திய ஹாக்கிபெடரேஷன் (ஐஎச் எப்) காத்திருக்கிறது.
இகு குறித்து சங்கத்தின் கவுரவ செயலாளர் ஜோதிராமன் துபாய் பத்திரிக்கைக்குஅளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
வெளி நாடுகளில் பங்கேற்கும் போட்டிகளில் பங்கேற்க அரசின் அனுமதிஅவசியமானது.
ஆசிய ஹாக்கி சங்கத்தின் கூட்டம் கோலாலம்பூரில் நடந்த போது பாகிஸ்தான் ஹாக்கிசங்க அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினோம். அப்போது, இரு நாடுகளும்கொள்கை அளவில் துபாயில் நடக்கும் ஹாக்கி போட்டிகளில் பங்கு பெறுவது எனமுடிவு செய்யப்பட்டது.
மேலும் ஐ.எச்.எப். தலைவர் கே.பி.எஸ் கில்லும், நானும் பாகிஸ்தான் ஹாக்கி சங்கசெயலாளர் முஸ்துருல்லா கானுடன் விரிவாக பேச்சு வார்த்தை நடத்தினோம்.
ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத துவக்கத்தில் துபாயில் ஹாக்கி போட்டிகளில்பங்கேற்க இருக்கிறோம்.
துபாயில் நடக்கு இருக்கும் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை தவிர மலேசியமற்றும் வங்கதேசஅணிகளையும் இந்த போட்டியில் விளையாட வைப்பதற்கானமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த போட்டிகள் நடைபெறும் நாட்கள் குறித்த விவரங்கள் எங்களுக்கு இன்னும்கிடைக்கப் பெறவிலலை. ஐக்கிய அரபு எமிரேட் அதிகாரிகள் இந்த போட்டிகளைநடத்துவதற்காக ஆடுகளத்தை சீரமைத்து வருகிறார்கள்.
ஒளி வெள்ளத்தை பாய்ச்சும் சிறப்பு விளக்குகளையும் அமைக்கும் முயற்சியிலும்அதிாகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என கூறினார்.
இந்தியாவில் தீவிரவாத செயலில் ஈடுபடுவதால், பாகிஸ்தானுடன் விளையாட்டுஉறவுகள் எதுவும் கொள்வதில்லை என இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக, பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட்போட்டியிலும், டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணிக்குஅனுமதி மறுக்கப்பட்டது. இதனால் இந்திய ஹாக்கி அணிக்கு துபாய் செல்ல அனுமதிகிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இந் நிலையில் கோலாலம்பூரிலிருந்து புதன்கிழமை திரும்பி வந்த ஐ.எச்.எப். தலைவர்கே.பி.எஸ்.கில் துபாயில் நடைபெறும் ஹாக்கி போட்டிகளில் இந்திய அணிபாகிஸ்தான் அணியுடன் விளையாடும் என தெரிவித்தார்.
ஐக்கிய அரபு நாடுகளின் ஹாக்கி கழக தலைவர் ரேசா அப்படி தெரிவிக்கையில் ஹாக்கிபோட்டிகள் நடைபெறுவதற்கு ஏற்ற விதத்தில் ஆடுகளம் விரைவில் தயாராகி விடும்என்றார்.
யு.என்.ஐ.