For Daily Alerts
Just In
சென்னை வந்தார் மொரீஷியஸ் பிரதமர்
சென்னை:
மொரீஷியஸ் பிரதமர் சர் அனிரூத்ா ஜகந்நாத் இரண்டுநாள் பயணமாகஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வெள்ளிக்கிழமை வந்தார்.
அவரை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, தமிழக முதல்வர்கருணாநிதி, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரை முருகன், போக்குவரத்துத்துறை அமைச்சர் பொன் முடி உட்பட பலர் அன்புடன் வரவேற்றனர்.
மொரஷீயஸ் பிரதமரை கெளரவிக்கும் விதமாக ராஜ்பவனில் ஆளுநர் இரவு உணவுவிருந்தளித்தார்.
தனது இரண்டு நாள் பயணத்தின் போது டைடல் பூங்காவிற்கும்,தேசிய கடலியல்தொழில்நுட்ப கழகத்திற்கும் மொரீஷியஸ் பிரதமர் விஜயம் செய்வார்.
சனிக்கிழமை மாலை சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் சிறப்பு பட்டமளிப்புவிழாவில் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, January 19, 2001, 5:30 [IST]