தாமரைக்கனிக்கு மீது நடவடிக்கை இல்லை .. சபாநாயகர்
சென்னை:
தமிழக சட்டசபையின் அலுவல் ஆலோசனை கமிட்டி தாமரைக்கனி மீது மேல்நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளது.
1999-ம் ஆண்டு மார்ச் மாதம் விவசாய துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை,அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் தாக்கியது தொடர்பாக அவர் 15 நாள்சிறையில் அடைக்கப்பட வேண்டும் என சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்தீர்ப்பளித்தார்.
வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையின் பணி ஆய்வுக் குழு கூட்டத்தில் பேசியசபாநாயகர் அ.தி.மு.க. உறுப்பினர் தாமரைக்கனி மீது எந்த விதமான மேல்நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அவருக்கு எச்சரிக்கை செய்து விட்டு விடலாம்.அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனிையில் ஒரு பகுதியை அவர் அனுபவித்துவிட்டதுபோதும் என கூறினார்.
இதை சட்டப்பேரவை எதிர்க்ட்சி தலைவர் சோ.பாலகிருஷ்ணனும் ஒப்புக் கொண்டார்.
சட்டசபையின் அலுவல் ஆய்வுக் குழுவின் படி அவை முன்னவரும், கல்வித்துறைஅமைச்சருமான அன்பழகன் சனிக்கிழமையன்று தாமரைக்கனி மீது மேல் நடவடிக்கைஎதுவும் எடுக்கப்பட மாட்டாது என்பது குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவார்.
மேலும் தாமரைக்கனி தொடர்ந்து சட்டசபை கூட்டங்களில் கலந்து கொள்வது குறித்ததீர்மானமும் நிறைவேற்றப்படும் எனவும் பழனி வேல் ராஜன் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications