வங்கிக் கிளைகள் மூடல்.. கிராமத்தினர் கொதிப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில், பல்வேறு கிராமங்களில் இருந்த இந்தியன் வங்கிக் கிளைகள் திடீரெனமூடப்பட்டத்தை எதிர்த்து அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட பல கிராமங்களில் இந்தியன் வங்கிக் கிளைகள் உள்ளன. இவற்றில்புதுப்பாளையம், ஆக்கூர், மாம்பட்டு, மடம், மேல்முடியனூர், எறையூர், பெரமணநந்தல், புரிசை, ரெட்டியார்பாளையம், மேல் சீசமங்கலம், தென் மாதிமங்கலம், ராஜ்தம் ஆகிய 12 கிராமங்களில் உள்ள கிளைகள் மூடப்பட்டுவிட்டன. அருகிலுள்ள இந்தியன் வங்கியின் பெரிய கிளைகளுடன் இவை இணைக்கப்பட்டு விட்டன.
வங்கிக் கிளைகள் மூடப்பட்டு விட்டதால், அந்த வங்கிகளின் ஊழியர்கள் தாங்கள் மாற்றப்பட்டுள்ள வங்கிகளுக்குச்செல்ல நடவடிக்கை எடுத்தனர். ஆனால் இதை கிராம மக்கள் எதிர்த்தனர். வங்கிகளின் முன்பு கூடி, இடமாற்றம்செய்யக் கூடாது என்று மறியல் செய்தனர்.
மாம்பட்டு, மடம் ஆகிய கிராமங்களில் இந்தப் போராட்டம் நடந்தது. போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டு அவர்கள்வந்து, கிராமத்தினரை சமாதானப்படுத்தினர். அதன் பிறகே வங்கி ஊழியர்கள் பொருட்களுடன் இடம் மாறிச் செல்லமுடிந்தது.












Click it and Unblock the Notifications