இலங்கையிலிருந்து 4 மீனவர்கள் விடுதலை
கொழும்பு:
இலங்கை, தலைமன்னாரில் வைத்து கைது செய்யப்பட்ட நான்கு தமிழக மீனவர்களை இலங்கைப் போலீஸார் சனிக்கிழமை விடுவித்தனர்.
விடுவிக்கப்பட்ட நான்கு மீனவர்களும் இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் இந்தியாவருவார்கள்.
விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சாமிநாதன், ஜெபமாலை பிச்சை என்ற பிரான்சிஸ், முனியசாமி வேலுச்சாமி மற்றும் மூக்கன் அழகன் ஆகியோர் கடந்த டிசம்பர்26 ம் தேதி தலைமன்னார் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படை வீரர்கள் அவர்களைக் கைது செய்தனர்.
தற்போது இலங்கைப் போலீஸார் அவர்களை விசாரித்து பின்னர் விடுவித்தது. வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ள 71 இலங்கை மீனவர்கள் டிசம்பர் மாதம் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை மீனவர்கள் 30 பேர் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
முன்னதாக, இரு நாடுகளிலும் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் மீனவர்களை விடுவிப்பது குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண்கதிர்காமரும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications