தி.க. போராட்டம் .. ஜெ. மூப்பனார் பங்கேற்பு
சென்னை:
திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ளஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் வீரமணியும், த.மா.கா.தலைவர் மூப்பனாரும சம்மதம்தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின் தன் இரண்டுமகன்களுடன் காரில் சென்ற போது உயிருடன் எரித்து கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் 1999-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம்தேதி ஒரிஸாவின் கியோர் கஞ்ச்என்ற இடத்தில் நடந்தது. இந்த சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலிதிராவிடர் கழகத்தால் இந்த மாதம் 22-ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டிமனித சங்கிலி போராட்டம் நடத்த திராவிடர் கழகம் தீர்மானித்துள்ளது.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர்ஜெயலலிதாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இந்த அழைப்பை ஏற்றுபோராட்டத்தில் கலந்து கொள்ள ஜெயலலிதா தொலைபேசி மூலம் சம்மதம்தெரிவித்தார்.
த.மா.கா. தலைவர் மூப்பானாரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள சம்மதம்தெரிவித்துள்ளார்.