ஜாதிக் கட்சிகள் காணாமல் போகும் .. நெடுமாறன்
நெய்வேலி (கடலூர் மாவட்டம்):
ஜாதிக் கட்சிகள் தேர்தலுக்குப் பின் இருக்காது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டசபைத்தேர்தலையொட்டியே ஜாதிக் கட்சிகள் முளைத்துள்ளன. இவை தேர்தல் முடிந்த பின் மறைந்து விடும். இவர்களைநம்பி, மக்கள் ஏமாற மாட்டார்கள்.
ஜாதிக் கட்சிகளை எந்த அரசியல் கட்சியும தங்களது கூட்டணியில் சேர்க்கக் கூடாது. அப்போதுதான் இத்தகையகட்சிகளுக்கு முடிவு ஏற்படும்.
வீரப்பன் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருக்கிறார். அவரைப் பிடிப்பதற்காக தமிழக, கர்நாடக அரசுகள்இதுவரை ரூ. 170 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளன. ஆனால் ஒரு பயனும் கிடைக்கவில்லை.
இரு மாநில அரசுகளும் வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்தால், கன்னட நடிகர் ராஜ்குமார்,பிற நண்பர்கள் ஆதரவுடன், வீரப்பனைச் சந்தித்துப் பேசத் தயாராக இருக்கிறேன்.
விடுதலைப் புலிகளின் சண்டை நிறுத்தத்தை இலங்கை அரசு மதிக்காமல் நடந்து கொள்கிறது. புலிகளின் சண்டைநிறுத்தம் உண்மையானது. அதனால்தான் அதை தமிழர் கட்சிகள் ஏற்றுக் கொண்டு, பேச்சுவார்த்தைக்கு வருமாறுஇலங்கை அரசுக்கு அறிவுரை கூறினர்.
இலங்கை அரசை சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு உலக நாடுகள் வற்புறுத்த வேண்டும் என்றார்நெடுமாறன்.












Click it and Unblock the Notifications