For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை சன்னிதான நடை மூடப்பட்டது

By Staff
Google Oneindia Tamil News

பந்தனம்திட்டா (கேரளா):

சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தின் நடை 61 நாள் மகரஜோதி பூஜைக்கு பிறகுசனிக்கிழமை மூடப்பட்டது.

சபரிமலையில் ஐயப்பன் கோவில் ஐயப்பன் ஜோதி வடிவாக காட்சி தரும் மகரஜோதிபூஜைக்காக 61 நாள் திறக்கப்பட்டிருந்தது. இந்த மாதம் 14-ம் தேதி ஜோதி தரிசனம்நடைபெற்றது. சனிக்கிழமை (20.01.2001) ஐயப்பன் கோயிலின் நடை மூடப்பட்டது.

காலை 7.00 மணிக்கு பந்தளம் மன்னரின் சார்பில், அரண்மனை பிரதிநிதி ஐயப்பனைதரிசனம் செய்தார். அதன் பின் மேல் சாந்தி ஹரிவராசனம் மந்திரம் உச்சரித்தபடியேமூலஸ்தானத்தின் நடையை மூடினார்.

புனிதமான 18-ம் படியைவிட்டு கீழே வந்தபின் மேல் சாந்தி கோவிலில் இந்த முறைவசூலான காணிக்கை பணத்தை அரண்மனை பிரிதிநிதியிடம் ஒப்படைத்தார்.

அரண்மனை பிரிதிநிதி ஸ்ரீகோவிலின் சாவியைமேல் சாந்தியிடம் ஒப்படைத்தார். மேல்சாந்தி இந்த சாவியை தேவஸ்தான மானேஜர் உன்னிகிருஷ்ண நாயரிடம்ஒப்படைத்தார்.

பந்தள அரண்மனை பிரதிநிதி தன்னிடம் அளிக்கப்பட்ட காணிக்கை பணத்தைதேவஸ்தான மானேஜரிடம் கொடுத்து அடுத்த ஆண்டு விழாவின் போது ஆகும்செலவுக்காக பயன்படுத்துக் கொள்ளும்படி கொடுத்தார். அவர் தந்திரியையும், மேல்சாந்தியையும் பணம் கொடுத்து கெளரவித்தார்.

அதன் பின் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக எடுத்துவரப்பட்ட திருஆபரணபெட்டிஅரண்மனை பிரதிநிதியுடன் பந்தளம் எடுத்துச் செல்லப்பட்டது.

மீண்டும் சபரிமலை சன்னிதானம், மலையாள மாதமான கும்ப மாதத்தின் போதுபூஜைக்காக பிப்ரவரி மாதம் 12-ம் தேதி திறக்கப்படும்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X