தொகுதிப் பங்கீடு: அதிமுக, காங். உடன்பாடு ஏற்படும்
சென்னை:
மூத்த காங்கிரஸ் தலைவரும், சோனியா காந்தியின் தூதுவருமான பிரணாப் முகர்ஜிவரவிருக்கும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடில் நல்ல விதமானஉடன்பாடு ஏற்படும் என கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தசோனியா காந்தியின் தூதராக மூத்த காங்கிரஸ் தலைவர் பிரணாப் முகர்ஜி ஜெயலலிதாவைசென்னையில் சனிக்கிழமை மாலை சந்திக்கவிருக்கிறார்.
டெல்லியிலிருந்து சென்னை வந்த பிரணாப் முகர்ஜி நிருபர்களிடம் கூறுகையில், எனதுபேச்சு வார்த்தை குறித்து காங்கிரஸ் காரியக் கமிட்டியிடம் கூறுவேன்.அவர்கள் இந்தவிஷயம் குறித்து முடிவெடுப்பார்கள்.
பேச்சுவார்த்தையின் அளவுகோல் குறித்தும் எந்த அடிப்படையில் பேச்சு வார்த்தைஅமையும் என்பது குறித்தும் கருத்து கூற விரும்பவில்லை,
எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தது போல் தொகுதி பங்கீடு இருக்குமா என்பது குறித்தும் நான்கருத்து கூற விரும்பவில்லை.
த.மா.கா.வினர் தங்கள் கட்சித் தலைவருக்கும், கட்சிக்கும் கொடுப்பது போல் காங்கிரஸ்கட்சியினரும் அவர்கள் தலைமைக்கும் கட்சிக்கும் மரியாதையளிக்கும் விதமாக தொகுதிகேட்பார்கள் என கூறி வருகிறார்கள். இது சரியான கருத்துதான் என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications