ரூ. 1000 கோடியில் பெங்களூரில் விமான நிலையம்
பெங்களூர்:
பெங்களூர் அருகே தேவனஹள்ளியில் ரூ 1000 கோடி செலவில் அமைய உள்ள சர்வதேச விமான நிலையப் பணிகளை பிரதமர் வாஜ்பாய் வெள்ளிக்கிழமைதொடங்கி வைத்தார்.
இதற்கான பூமி பூஜை தொடக்க விழா பெங்களூர் விதான சவுதா வரவேற்பு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. பூமி பூஜையைத் தொடங்கிவைத்து வாஜ்பாய் பேசியதாவது:
சர்வதேச விமான நிலையம் அமைப்பதில் அரசும், தனியாரும் இணைந்து செயல்படுகின்றன. நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியின் தலைமையிடமாக பெங்களூர்விளங்குகிறது. கம்ப்யூட்டர் மென்பொருட்கள் தயாரிப்பிலும் பெங்களூர் சிறந்து விளங்குகிறது. சாப்ட்வேர் ஏற்றுமதியிலும் பெங்களூர் சிறந்து விளங்குகிறது.
1998 ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப மாநாட்டைத் தொடங்கி வைக்க பெங்களூர் வந்த போது சர்வதேச விமான நிலையம் அமைக்க உதவுவதாகஉறுதி அளித்தேன். அதன்படி அதற்கான பூமி பூஜையை தொடங்கி வைக்கிறேன்.
மத்திய - மாநில அரசின் சுமூக உறவுக்கு இந்தக் கூட்டு திட்டம் ஒரு முன் உதாரணம் ஆகும். பொருளாதார வளர்ச்சிக்கு மற்ற மாநிலங்களும் இதுபோன்ற திட்டங்களை அமபடுத்த முன்வர வேண்டும் என்றார் வாஜ்பாய்.
நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சரத் யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications