ரஜினி மகளுக்கு சிறப்புப் பட்டம்
சென்னை:
சென்னையில் நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு நாட்டிய மயூரி என்ற பட்டத்தை துக்ளக் ஆசிரியரும், எம்.பி.யுமான சோசனிக்கிழமை வழங்கினார்.
நடனாஞ்சலி சபை சார்பில் நூற்றாண்டு நாட்டிய விழா நிகழ்ச்சி சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா கலந்து கொண்டுஆடினார்.
நாட்டிய விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட துக்ளக் ஆசிரியர் சோ, ஐஸ்வர்யாவுக்கு நாட்டிய மயூரி பட்டத்தை வழங்கினார்.
விழாவில் அவர் பேசுகையில், சங்கீதமும், நாட்டியமும் ஒருவருக்கு சொல்லிக் கொடுத்தால் மட்டும் வந்து விடாது. அது பிறப்பிலேயே வரும் தெய்வீகக்கலையாகும். நாட்டிய மயூரி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா அதை பொழுதுபோக்காக மட்டும் ஆடாமல் முழு திறமையையும் காட்டி பல பட்டங்களையும்,விருதுகளையும் பெற வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில் நான் இந்த விழாவில் கலந்து கொள்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் தனது நடிப்பின்மூலம் மிகவும் பிரபலமானவர். அவரது மனைவி லதாவும் கலையார்வம் மிக்கவர்.
அப்படிப்பட்ட கலைக்குடும்பத்தில் பிறந்த தங்களது குழந்தைகளை எவ்வித தலைக்கனமும் இல்லாமல் மிகவும் பணிவோடு வளர்த்து உள்ளனர் லதாவும்,ரஜினிகாந்தும். ஐஸ்வர்யாவின் நாட்டியத்தைப் பார்த்தவர்கள் அவரது திறமையைப் பற்றி நன்கு அறிந்திருப்பார்கள் என்றார் சோ.












Click it and Unblock the Notifications