தி.மு.க.வுடன் கூட்டணி சேருமா இந்து முன்னணி?
திருப்பூர்:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் இந்து முன்னணி தி.மு.க.வுடன் கூட்டு சேருமா என்பது குறித்து மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்என்று அதன் அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்தார்.
திருப்பூரில் இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் அளித்த பேட்டி:
சமீபத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினேன். சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்களின் குறைகளை போக்க வேண்டும் என்று அவரிடம்கூறினேன்.
இந்துக்களுக்கு விரோதமாக யார் பேசினாலும், நடந்தாலும் நாங்கள் எதிர்ப்போம். கருணாநிதியுடன் தனிப்பட்ட முறையில் எனக்கு எவ்வித பகையும்கிடையாது.
இந்து முன்னணி மாநில செயற்குழுக் கூட்டம் அடுத்த மாதம் 3 ம் தேதியிலிருந்து 5 ம் தேதி வரை நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
செயற்குழுக் கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கவுள்ளோம். வரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டு சேர்வோமோ என்பது குறித்தும் முடிவுசெய்யப்படும் என்றார் ராமகோபாலன்.












Click it and Unblock the Notifications