வேட்டுவக் கவுண்டர்களும் கட்சி துவக்குகிறார்கள்
கரூர்:
கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர்கள் சங்கம் புதிய கட்சி ஒன்றைத் துவங்கியுள்ளது.கொங்கு முன்னேற்ற முன்னணி என அழைக்கப்படும் இந்தக் கட்சியின் மாநில மாநாடு29ம் தேதி நடக்கிறது.
இது குறித்து கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர்கள் சங்கத் தலைவர் மருதாசலக்கவுண்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர்கள் சங்கம் சார்பில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத்துவங்கியுள்ளோம். கடந்த பொங்கலன்று துவக்கப்பட்ட இந்தக் கட்சியின் மாநிலமாநாடு வரும் ஜனவரி மாதம் 29ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். கரூரில் இந்தமாநாடு நடைபெறும்.
இதில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே மணி, தமிழர்பூமிக் கட்சித் தலைவர் கு.பா.கிருஷ்ணன், மக்கள் இயக்கத் தலைவர் ராமன்,ஜெகஜீவன்ராம் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டின் போது கட்சியின் பெயர் இறுதி செய்யப்படும். கட்சியின் கொடி 30சதவீதம் சிவப்பு, 10 சதவீதம் வெள்ளை, 60 சதவீதம் பச்சை ஆகியவை இருக்கும்.அடுத்த மாதம் பிப்ரவரி மாதம் 15ம் தேதிக்குள் கட்சியின் பெயர் தேர்தல் கமிஷனிடம்முறைப்படி பதிவு செய்யப்படும் என்றார்.