மதுரை முன்னாள் மேயர் மீது தாக்குதல்
மதுரை:
மதுரை நகர முன்னாள் மேயர் பட்டுராஜன், பெண் உட்பட இருவரால் தாக்கப்பட்டார்.
மதுரை நகர முன்னாள் மேயரும், தி.மு.க. முக்கியப் பிரமுகருமானவர் பட்டுராஜன்.லதாதேவி, ஆனந்தபாண்டி எனப்படும் பொன் ரவிகுமார் (36) ஆகியோருக்கும்,பட்டுராஜனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு, பட்டுராஜன் வசிக்கும் கே.கே, நகர் பகுதிக்குஇவர்கள் சென்று, பட்டுராஜன் வீட்டிற்குள் நுழைந்து அவரை இரும்பு கம்பியால்தாக்கினார். உயிர் தப்புவதற்காக பட்டுராஜன், வீட்டை விட்டு தப்பி ஓடினார்.அப்போது, பட்டுராஜன் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் இக்கும்பல் பறித்துச்சென்றனர்.
தாக்குதல் குறித்து போலீசாரிடம் கூறினால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் எனவும் பட்டுராஜனை மிரட்டி விட்டு சென்றனர்.
இதுகுறித்து பட்டுராஜன் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து இருவரையும்போலீஸார் கைது செய்தனர். லதா தேவி வக்கீல் என பொய் சான்றிதழ் கொடுத்துவக்கீல்கள் சங்கத்தில் தன் பெயரை பதிவு செய்திருந்தார். உண்மை தெரிந்ததும் அவர்வக்கீல்கள் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டுராஜனுக்கு தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவர் அரசு ராஜாஜிமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவித்தனர்.
யு.என்.ஐ.