ஆண் குழந்தை பெற்றுத் தராத மனைவி கொலை
சென்னை:
சென்னையில் மனைவி மீது கோபம் கொண்ட கணவர், மனைவியை தீ வைத்து எரித்துகொன்றார்.
சென்னையில் நிர்மலா (36) என்பவர் தன் கணவருடன் வசித்து வருகிறார். இந்ததம்பதியருக்கு 12 வயது பெண் குழந்தையும் இருக்கிறது. இவர்கள் ஆவடியில் வசித்துவருகின்றனர்.நிர்மலாவின் கணவர் மனைவியுடன் சண்டை போட்டு கோபம் கொண்டுஅவரை தீ வைத்து கொளுத்தி கொன்று விட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:
நிர்மலாவின் கணவர் கால்நடைகளை விற்கும் தரகராக இருந்து வருகிறார். இவர் மதுஅருந்தும் பழக்கமும் உள்ளவர். சம்பவ தினமான சனிக்கிழமை இரவு தனக்கு ஆண்குழந்தை பெற்றுத்தரவில்லை என கூறி நிர்மலாவிடம் சண்டை போட்டார்.
அதன் பின் ஏற்பட்ட கடும் கோபத்தால் தன் 12 வயது பெண் கண் முன்னே தன்மனைவியை உடலில் தீ வைத்தார். நிர்மலா தீக்காயங்களுடன்அரசு கீழ்பாக்கம்மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல்இறந்து போனார்.
தலைமறைவாக இருக்கும் நிர்மலாவின் கணவரை தேடி வருகிறோம் என கூறினர்.
இந்த மாதம் 17-ம் தேதி நடந்த சண்டையில் நிர்மலா மீது மண்ணெண்ணெய் ஊற்றிநெருப்பு வைத்து விட்டு நிர்மலாவின் கணவர் ஓடி விட்டார். அக்கம் பக்கத்து வீட்டில்இருப்பவர்கள் நெருப்பை அணைத்து நிர்மலாவை காப்பாற்றினார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.