மத பிரச்சனைக்கு வழி வகுக்கிறது பா.ஜ.க.. காங். புகார்
பாண்டிச்சேரி:
பாரதிய ஜனதா கட்சி ராமர் கோவில் கட்டும் பணிக்கு அனுமதி வழங்கி விட்டதாகபாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் நாராயணசுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அயோத்தியில் பிரச்சனைக்குரிய இடத்தில், ராமர் கோயில் கட்டுவதற்கு பா.ஜ.க.அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம்வகிக்கும் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் தங்கள்நிலையை தெரிவிக்க வேண்டும் என பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர்நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்போவதாக விஸ்வ இந்து பரிஷத் கூறியுள்ளது.இதற்கு பிரதமரும் அனுமதி அளித்திருப்பதாக தெரிகிறது இது மதப் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
மதப்பிரச்சனைக்கு வழி வகுக்கக்கூடிய தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகமுதல்வர் இன்னும் தொடரப் போகிறாரா?
டாக்டர் ராமதாஸ் பாண்டிச்சேரி முதல்வராக மீனவரோ, வன்னியரோ அல்லதுஆதிதிராவிடரோ வருவார் என கூறி வந்தார். ஆனால் இப்போது வேறு விதமாக கூறிவருகிறார். அவர் தனது நிலையில் உறுதியாக இல்லை. தமிழகத்தில் செயல்போடுவதுபோல் ராமதாஸ் பாண்டிச்சேரியில் செயல்பட முடியாது.
தி.மு.க. உயர் நிலை குழுவில் நடந்த கூட்டத்தில் சனிக்கிழமை சண்டை நடந்தது.ஜனநாயகம் பற்றி தி.மு.க. அமைப்பாளர் ஜானகிராமன் இனி காங்கிரஸ் மீதோ அல்லதுமற்ற கட்டிகள் பற்றியோ குறை கூறக்கூடாது என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications