"ஆண்டு இறுதிக்குள் இலகு ரக விமானங்கள் தயாராகும்
டெல்லி:
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் இலகு ரக விமானங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகி விடும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னான்டஸ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
வர்த்தக கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், இலகு ரக விமானத் தயாரிப்பு பணி கடந்த 17 வருடங்களாக நடந்து வந்தது. இந்த ஆண்டுஜனவரி 4 ம் தேதி பெங்களூரில் வெற்றிகரமாகப் பறக்க விடப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இலகு ரக விமானத்தின் இரண்டாவது மாடல் அடுத்த 3 மாதங்களில் தயாராக்கப்பட்டு விடும். மூன்றாவது மாடல் இந்த வருட இறுதிக்குள்தயாராகி விடும்.
1998 ம் ஆண்டு இந்தியா ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதையடுத்து அமெரிக்கா, இந்தியா மீது ராணுவத் தடைவிதித்தது. இதனால் இலகு ரக விமானம் தயாரிப்புத் திட்டத்தில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது.
முதல் இலகு ரக விமானம் அடுத்த மாதம் பெங்களூரில் நடக்கும் விமானக் கண்காட்சியில் வைக்கப்படும் என்றார் ஜார்ஜ் பெர்னான்டஸ்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications