நாட்டை விட்டு வெளியேற எஸ்ட்ரேடாவுக்குத் தடை
Subscribe to Oneindia Tamil
மணிலா:
பிலிப்பைன்சில் கோடிக்கணக்கில் ஊழல் புரிந்தது தொடர்பாக முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரேடா, அவர் மேல் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள்விசாரணை முடியும் வரை நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று அந்நாட்டின் நிதித்துறை செயலாளர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
ஊழல் புகாரையடுத்து எஸ்ட்ரேடாவுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் மக்கள் கடந்த சனிக்கிழமை பொங்கி எழுந்தனர். நாடு முழுவதும் போராட்டம்வலுத்தது. இதையடுத்து அதிபர் பதவியிலிருந்து எஸ்ட்ரேடா விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாட்டை விட்டு வெளியே எஸ்ட்ரேடாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications