"மாலத்தீவிலுள்ள குமரி மீனவர்கள் மீட்கப்படுவார்கள்
சென்னை:
மாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கன்னியாக்குமரியைச் சேர்ந்த 8 மீனவர்களை விடுவிக்க தமிழக அரசுஅனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெனிபர் சந்திரன்செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
சட்டசபையில் தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. குமாரதாஸ் கவனஈர்ப்பு மற்றும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தபோது, அமைச்சர் ஜெனிபர் சந்திரன் பேசியதாவது:
மாலத்தீவு சிறையில் கன்னியாக்குமரியைச் சேர்ந்த 8 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்பதற்குத்தேவையான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. அவர்களை விரைவில் விடுவிக்கத்தேவையான அனைத்து முயற்சிகளையும் தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசும், மாநிலஅரசும் எடுத்த நடவடிக்கைகள் அனைவருக்கும் தெரியும்.
கடந்த நவம்பர் 12 ம் தேதி கேரள எல்லைப்பகுதியான விழிஞம் துறைமுகத்தில் கன்னியாக்குமரியைச் சேர்ந்தமீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அப்போது மாலத்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்ததால் கைதுசெய்யப்பட்டனர்.
யு. என்.ஐ.