For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடும் பனியால் விமானங்கள் தாமதம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

டெல்லியில் கடும் பனி காரணமாக இந்திரா காந்தி விமான நிலையம் மூடப்பட்டிருந்ததால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமானங்கள்செவ்வாய்க்கிழமை காலை 3 மணிநேரம் தாமதமாக வந்தன.

திங்கள்கிழமை இரவு வரை விமானங்கள் சரியான நேரத்திற்கு வந்து கொண்டிருந்தன. ஆனால் திடீரென்று வானிலையில் ஏற்பட்ட மாற்றம்காரணமாகவும், தொடர்ந்து பனி மூட்டம் இருந்ததாலும் இந்திராகாந்தி விமான நிலையம் செவ்வாய்க்கிழமை காலை 6.58 முதல் 9.48 வரைமூடப்பட்டது.

கடும் பனி காரணமாக விமான ஓடுபாதையைக் கண்காணிக்கும் காமிராக்கள் வேலை செய்யாததால் விமானங்கள் விமான நிலையத்துக்குக்குறிப்பிட்ட நேரத்துக்கு வரமுடியவில்லை. சரியாக பத்து மணி அளிவில்தான் வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து உள்ளூர் விமானங்கள்இயக்கப்பட்டது.

அதற்குமுன் முதலில் 9.48 மணியளவில் முதல் சர்வதேச விமானமும், 9.56 மணிக்கு உள்நாட்டு விமானமும் வந்திறங்கின. இந்திரா காந்தி விமானநிலையத்திலிருந்து முதல் சர்வதேச விமானம் 10.29 க்கும், முதல் உள்நாட்டு விமானம் 10.10 க்கும் புறப்பட்டுச் சென்றது என்றனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தார் கூறுகையில், ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை. டெல்லி - மும்பை விமானம் மட்டும் 2 மணிநேரம் தாமதமாக வந்தது என்றனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X