சண்டைநிறுத்த நீட்டிப்பு ... பிரதமருக்கு ஜனாதிபதி பாராட்டு
டெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரம்ஜானையொட்டி அறிவிக்கப்பட்ட சண்டைநிறுத்தத்தை மேலும் ஒருமாதத்திற்கு நீட்டிக்க பிரதமர் வாஜ்பாய்உத்தரவிட்டிருப்பது மிகவும் நல்ல முயற்சியாகும் என்று ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் கூறினார்.
இந்த சண்டைநிறுத்த நீட்டிப்பால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முழு அமைதி நிலவும் என்று எதிர்பார்க்கலாம்.
நாட்டின் 52 வது குடியரசு தினத்தையொட்டி ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் ஆற்றய உரை:
பல்வேறு இன்னல்களைத் தாண்டி நாம் இன்று நாட்டின் 52 வது குடியரசு தினத்தைக் கொண்டாடவுள்ளோம். இதை நினைக்கும்போது மிகவும்மகிழ்ச்சிகரமாக உள்ளது. உலக நாடுகளில் குறிப்பாக அண்டைநாடுகளில் என்ன நடக்கிறது என்பது குறித்து இந்தியாவுக்கு எப்போதுமே விழிப்புணர்வுஉண்டு.
இந்தியாவில் தீவிரவாதம் தலையெடுப்பதை இந்தியா ஒருபோதும் விரும்பாது. தீவிரவாதம், குற்றங்கள் ஆகியவற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவதே இந்தியாவின் 52 வது குடியரசு தின சபதமாக இருக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதி ஏற்படுத்தியே தீர வேண்டும் என்பதில் இந்தியா முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது. அங்கு வாழும் மக்கள்தீவிரவாதிகளாலும், ராணுவ வீரர்களாலும் எப்போதும் ஆபத்துக்குள்ளாகின்றார்கள். அவர்களால் அமைதியாக வாழ முடிவதில்லை. இந்த நிலையில்பிரதமர் வாஜ்பாய் காஷ்மீரில் சண்டைநிறுத்தம் நீட்டிப்பை வரவேற்கிறேன்.
நாம் வருங்காலத்தில் எவ்வளவோ துறைகளில் முன்னேற வேண்டியிருக்கிறது. ஆதலால் இந்திய மக்கள் வன்முறை, தீவிரவாதம் ஆகியவற்றைக்கைவிட்டு விட்டு கல்வி, பொருளாதாரம், தகவல்தொழில்நுட்பம் இன்னபிற துறைகளில் முன்னேற்றமும் வளர்ச்சியும் அடையும் வகையில் செயல்படவேண்டும் என்றார் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன்.
யு.என்.ஐ.