For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தலுக்குத் தயாராகிறது தெலுங்கு சங்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பல ஜாதிக் கட்சிகள் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற நிலையில் தெலுங்குபேசுபவர்களின் கழகத்தினர் தங்கள் சங்கத்தினரும் வரவிருக்கும் போட்டியிடுவார்கள் என அறிவித்துள்ளனர்.

இது குறித்து தெலுங்கு கழகத்தின் தலைவர் கங்குசாமி நாயுடுவும்,செயலாளர் அனந்தராமனும் மற்றும் பலஅங்கத்தினரும் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 2 கோடி தெலுங்கு பேசும் மக்கள் உள்ளனர். தமிழகத்தை ஆண்ட எல்லா ஆட்சியினாராலும் எங்களின்பல கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டு வந்துள்ளன. தெலுங்கு மக்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் எங்கள்சங்கத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்த இருக்கிறோம்.

தமிழகத்தில் இருக்கும் 21 தொகுதிகளில் 50 சதவிகிதம் பேர் தெலுங்கு மக்கள் இருக்கிறார்கள். மற்ற 41தொகுதிகளில் 30 முதல் 50 சதவிகிதம் தெலுங்கு மக்கள் இருக்கின்றனர்.

பெரிய கட்சிகளில் பங்கு பெற்றிருக்கும் தெலுங்கு தலைவர்கள் தெலுங்கு மக்களின் மேம்பாட்டிற்காக எதுவும்செய்யவில்லை. தெலுங்கு சங்கத்தை ஒரு கட்சியாக மாற்றுவது குறித்த முடிவு இந்த ஆண்டு மார்ச் மாதம் 5-ம் தேதிநடக்கவிருக்கும் மாபெரும் பேரணிக்கு பின் முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் சில ஜாதிக் கட்சிகளால் துவக்கப்பட்டுள்ள தமிழக ஜனநாயக முன்னணியில் இணைவது பற்றி அதில்இணையும் அரசியில் கட்சிகளை பற்றி அறிந்த பின் முடிவு செய்வோம் என கூறினர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X