For Daily Alerts
Just In
தகவல் சாதனங்களின் போக்கு... போப் வருத்தம்
வாடிகன் சிட்டி:
தகவல் தொடர்பு சாதனங்கள் தங்கள் வசதிக்கேற்ப செய்திகளை மாற்றி வெளியிடுவதாக போப் இரண்டாம் ஜான் பால் வருத்தம் தெரிவித்துள்ளார்.
35வது உலகத் தகவல் தொடர்பு தினத்தை முன்னிட்டு வாட்டிகன் நகரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தகவல் சாதனங்கள் செய்தியை திரித்து வெளியிடுவதுடன்கிறிஸ்துவத்துக்கு எதிராகவும் சிலநேரங்களில் செய்திகள் வெளியிடுகின்றன என்றார்.
இச்சூழ்நிலையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கத்தோலிக்கர்கள் தங்கள் மதத்தைப் பரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் நவீன போக்கைக் கொண்டிருப்பது தகவல் தொடர்பு அமைப்புக்களின் கலாசாரமாக மாறி வருவதே இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளதுஎன்றார் போப்.
ஐ.ஏ.என்.எஸ்.
Comments
Story first published: Friday, January 26, 2001, 5:30 [IST]