இந்தியக் கடலில் மீன்பிடித்த 46 வெளிநாட்டவர் கைது
புவனேஸ்வர்:
ஒரிசா மாநிலம் பாராடிப் துறைமுகம் அருகே இந்தியாக் கடலில் மீன்பிடித்தது தொடர்பாக தாய்லாந்தைச் சேர்ந்த 46 பேரைப் போலீஸார்வியாழக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து பாராடிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிஜோய் மொகன்தி கூறுகையில், இந்தியக் கடலில் மீன்பிடித்தது தொடர்பாக தாய்லாந்தைச் சேர்ந்த 46பேரைக் கைது செய்துள்ளோம்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து அவர்களது படகில் நின்றுகொண்டு மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
இவர்கள் வெளிநாட்டவர்தான் என்ற சந்தேகம் வந்ததையடுத்து இவர்கள் அனைவரையும் கைது செய்தோம். அவர்கள் அனுமதியில்லாமல் இந்தியக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பேசும் மொழியை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் அவர்களிடம் பாஸ்போர்ட்டுக்கள் இல்லை. அவர்கள் கைது செய்யப்பட்டுமாஜிஸ்ட்டிரேட் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications