அண்ணா நினைவுநாள்.. ஜெ.மவுன விரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி அடுத்த மாதம் 3-ம் தேதி ஜெயலலிதா தலைமையில் மெளன ஊர்வலம்நடைபெறவிருக்கிறது.
இது பற்றி அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அண்ணாவின் 32-வது நினைவு நாள் அடுத்த மாதம் 3-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் இருக்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர்ஜெயலலிதா தலைமையில் மொள ஊர்வலம் புறப்படும்.
இந்த ஊர்வலம் வாலாஜா சாலை வழயாக கடற்கரையிலிருக்கும் அண்ணா சமாதியை சென்றடையும்.
இந்த பேரணியில் தலைமை கழக நிர்வாகிகளும், நாடாளுமன்ற. சட்டசபை உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டு அண்ணா நினைலிடத்தில் மலர்அஞ்சலி செலுத்துவார்கள்.
கட்சி தொண்டர்கள் அங்கங்கு இருக்கும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனகூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications