இங்கிலாந்திலிருந்து 2 குழுக்கள்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் உயிரிழந்தவர்களை மீட்க இங்கிலாந்து இரண்டு குழுக்களை அனுப்பி வைத்துள்ளது.
இரண்டு குழுக்களும் இடிபாடுகளுக்கிடையில் கிடக்கும் சடலங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெள்ளிக்கிழமை இரவு மான்செஸ்டரில் இருந்து ஒரு குழு புறப்பட்டு குஜராத் வந்தது. இன்னொரு குழு சனிக்கிழமை இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு வந்தது.
இங்கிலாந்திலிருந்து செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூக சேவை நிறுவனங்களின் உறுப்பினர்கள் மீட்புப்பணிக்குழுவில்இடம்பெற்றுள்ளனர்.
அவர்களிடம் கனரக இயந்திரங்கள், டிராக்டர்கள், புல்டோசர்கள், டிடெக்டர்கள் உள்ளன. இதுவரை உயிரிழந்தோரின் குடும்பத்திற்காக 5 மில்லியன்டாலர்கள் நிதியுதவி செய்வதாகவும் இங்கிலாந்து அறிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications