குடியரசு தின புகைப்படக் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக செய்தித்துறை சார்பில் குடியரசு நினைவுகளை போற்றும் விதமாக சென்னையில் அமைக்கப்பட்டிருந்தபுகைப்பட கண்காட்சியை தமிழக கல்லவித்துறை அமைச்சர் அன்பழகன் திறந்து வைத்தார்.
இந்திய குடியரசு பொன்விழா நிறைவு விழா வெள்ளிக்கிழமை தமிழக அரசின் சார்பில் கொண்டாடபட்டது. இந்தவிழாவில் தமிழக கல்வி அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டார். அப்போது செய்தித்துறை சார்பில்அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார்.
இந்த விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் முல்லை வேந்தன் முன்னிலைவகித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அன்பழகன் சான்றிதழகளயும் ,பரிசுகளையும் வழங்கினார்.
இந்த விழாவில் சட்டசபை சபாநாயகர் பழனிவேல் ராஜன், அமைச்சர் தா. கிருட்டிணன் ஆகியோரும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications