பிணநகரமாகியது தொழில்நகரம்
டெல்லி:
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொழில்நகரமான குஜராத் குடியரசு தினத்தன்று ஏற்பட்ட பூகம்பத்தால் பெரும் அழிவை சந்தித்து விட்டது என்றேகூறலாம் என்று வர்த்தகப் பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய வர்த்தக சம்மேளன அதிகாரிகள் தனிக்குழு ஒன்றை அமைத்துள்ளனர். இந்தக்குழு குஜராத்தில் ஏற்பட்ட பூகம்ப பாதிப்பு, மீட்பு நடவடிக்கை,மீண்டும் தொழில்கள் செய்ய முடியுமா என்பது குறித்து விசாரிப்பார்கள்.
குஜராத் மாநிலம் இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய தொழில்நகரமாகும். இங்கு பெட்ரோகெமிக்கல், துணிவகைகள், உரவகைகள், உப்பு,விஸ்கோஸ், பல்புகள், காகிதங்கள், சிமென்ட், மருந்துப்பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும்பொருட்கள் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு தொழிலதிபர்கள் தொழில்நகரம் என்று வர்ணிக்கப்படும் குஜராத் மாநிலத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இந்தியாவின்பொருளாதார வளர்ச்சியில் குஜராத் முன்னிலை வகிக்கிறது.
குடியரசு தினத்தன்று ஏற்பட்ட பூகம்பம், பெருமளவில் உயிர்ச்சேதத்தை மட்டும் ஏற்படுத்தவில்லை. தொலைத்தொடர்பு, தொலைபேசி வயர்கள்,சாலைகள், மின்சார விநியோகம், ரயில்வே பாதைகள் ஆகியவற்றையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் மட்டும் ரூ 20 பில்லியன் அளவுக்குசேதம் ஏற்பட்டுள்ளது என்று முதல்நிலை கணக்கீடுகள் தெரிவித்துள்ளன.
ஆசியாவிலேயே மிகப்பெரிய எண்ணெய்க்கிணறான ரிலையன்ஸ் ஜாம்நகரில் உள்ளது. இங்கு நிலநடுக்கப்பாதிப்பு எதுவும் இல்லை எனினும் எண்ணெய்க்கிணறுபூட்டியே உள்ளது. ஹாசிரா, பீஜாப்பூர், ஜகதீஷ்பூர் பகுதிகளில் உள்ள பல தொழிற்சாலைகள் பெரும் சேதமடைந்துள்ளன.
கான்ட்லா வில் உள்ள இந்திய எண்ணெய்க் கழகத்தில் முன்பகுதிகள் இடிந்து விழுந்து விட்டன. இங்கிருந்துதான் ராஜஸ்தான், பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம்,டெல்லி ஹரியானா மாநிலங்களுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கிரிஷக் பாரதி கூட்டுறவு தொழிற்சாலை, லர்சன் டர்போ, எஸ்ஸார் ஸ்டீல்,ரிலையன்ஸ் தொழிற்சாலைகளில் ஏற்பட்டுள்ள சேத மதிப்புக்கள் இன்னும் கணக்கிடப்படவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications