திருச்சி வந்தார் ஜெயா

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

ஜெயலலிதா பயணத் திட்டத்தை மாற்றியமைத்துக் கொண்டு ஒரு நாள் முன்னதாக திருச்சி வந்து சேர்ந்தார்.

தேசிய லீக் கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள ஞாயிற்றுக்கிழமை திருச்சி வருவதாக இருந்த அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதன் திட்டத்தை மாற்றியமைத்துக் கொண்டு சனிக்கிழமையன்றே திருச்சி வந்து சேர்ந்தார்.

தேசிய லீக் கட்சியின் மாநில மாநாட்டில் த.மா.கா தலைவர் மூப்பனார், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயலாளர் நல்லகண்ணு உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு அங்கிருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதாக திட்டமிட்டிருந்தார். அதற்காக அவர் ஞாயிற்றுக்கிழமை காலைதிருச்சி வருவார் என கூறப்பட்டிருந்தாலும், அவர் பயணத் திட்டத்தில் ஏற்கனவே குழப்பம் இருந்து வந்தது.

இந்நிலையில் ஜெயலலிதா சனிக்கிழமை மாலை கார் மூலம் சென்னையிலிருந்து கிளம்பி ஞாயிற்றுக்கிழமை அதிகாலைக்குள் திருச்சி வந்து சேர்வார்எனவும் கூறப்பட்டது. இதனால் அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் விழாவில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பங்கு கொண்டு எம்.ஆர். ராதா சிலையை திறந்து வைக்கிறார். இந்தவிழாவிற்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி ஏற்பாடு செய்திருக்கிறார்.

இந்த விழாவிலும் மூப்பனார் உட்பட பல தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் கலந்து கொண்ட பின் வி.பி.சிங் கூட்டணி பற்றியும்,மூன்றாவது அணி அமைப்பது பற்றியும் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார். இதை தவிர்பதற்காக ஜெயலலிதா முன்னாதக திருச்சிகிளம்பி விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் ஜெயலலிதா திருச்சி துறையூர் அருகில் இருக்கும் சிறுவாச்சூரில் உள்ள புகழ் வாய்ந்த காளிகோயிலில் சிறப்பு வழிபாடு செய்வதற்காக முன்னதாகஜெயலலிதா திருச்சி கிளம்பினார் என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+