மேட்டூரில் நிலக்கரி சரிந்து 6 பெண்கள் பலி
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கழிவு நிலக்கரி குவியல் சரிந்து விழுந்ததில் 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் கழிவு நிலக்கரியானது மற்ற உபயோகத்திற்காக தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது.
அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட கழிவு நிலக்கரி குவியலில் இருந்து சுத்தமான நிலக்கரி பொறுக்கி எடுப்பதில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது நிலக்கரி குவியல் சரிந்து விழுந்தது. இதில் 6 பெண்கள் பலியானர்கள். மேலும், 3 பேர் படுகாயமடைந்து மேட்டூர் அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications