அதிமுக வேட்பாளர் விண்ணப்ப விற்பனை துவங்கியது
சென்னை:
அதிமுக சார்பில் தமிழக, பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலில்களில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்குவிண்ணப்பங்களை விற்கும் பணி திங்கள்கிழமை துவங்கியது.
தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து ஒவ்வொருகட்சியும் ஒவ்வொரு விதமாக தேர்தல் பணியைத் துவக்கியுள்ளன.
அதிமுக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக தேர்தலில் போட்டியிடவிரும்புபவர்களின் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. தமிழகத்தின் 234 தொகுதிகள், பாண்டிச்சேரியின் 30தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விண்ணப்பங்கள் விற்கும் பணி திங்கள்கிழமை துவங்கியது.
தமிழக சட்டசபை வேட்பாளர் விண்ணப்பம் தலா ரூ. 10,000த்திற்கும், பாண்டிச்சேரி விண்ணப்பம் ரூ. 7000க்கும்விற்கப்பட்டது.
இரு சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிடுவதற்கான தொகுதிப் பங்கீட்டை இன்னும் கூட்டணிக் கட்சிகளுடன்அதிமுக முடிக்கவில்லை. இருப்பினும், மொத்த இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளில் அதிமுகபோட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.