பிறந்த நாளில் பூகம்ப வசூல்
டெல்லி:
முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சர் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி உறுப்பினரான அமர் சிங் தனது பிறந்த நாளுக்கு யாரும் பரிசு கொடுக்கவேண்டாம். அதற்குப் பதிலாக குஜராத் பூகம்பத்திற்கு நிதியுதவி அளியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்தநாளை ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினார். பிறந்தநாளின்போது வரும் விருந்தினர்கள், பூகம்பநிதியுதவி அளியுங்கள் என்று அவர் கூறியதையடுத்து அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூற வந்த தொழிலதிபர்கள், பெரும் பணக்காரர்கள் அவரிடம்குஜராத் பூகம்ப நிதியுதவி அளித்தனர்.
அமர்சிங், குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ 3.40 கோடி வசூல் செய்துள்ளார். சஹாரா குரூப் நிறுவனத் தலைவர் சுப்ரதா ராயும்,குஜராத் ஆம்புஜா சிமென்ட் நியோடியா சகோதரர்களும் சேர்ந்து ரூ 30.1 லட்சம் கொடுத்துள்ளனர்.
ஸ்டாக் புரோக்கர் கேதான் பரிக் ரூ 20.1 லட்சம் சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், நடிகர்கள் அமிதாப் பச்சன், அஜய் தேவ்கான்ஆகியோர் தலா ரூ 10.1 லட்சமும் அளித்துள்ளனர். நடிகைகள் ஸ்ரீதேவி மற்றும் பூஜா பத்ரா ஆகியோர் தலா ரூ 5 லட்சம் அளித்துள்ளனர். பிரதமர் நிவாரணநிதியுதவி திட்டத்தின் கீழ் தகவல் தொழில்துட்பத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜனிடம் ரூ ஒரு கோடியை, அமர் சிங் கொடுத்தார்.
மும்பையிலுள்ள வைர வியாபாரிகள், அமர் சிங்கின் நண்பர்கள் என்று கூறி குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி வசூல் செய்துவருகிறார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications