1.5 மில்லியன் கோருகிறது இந்தியா
பூஜ்:
குஜராத்தில் பூகம்பம் பாதித்த பகுதிகளை சீரமைக்க 1.5 மில்லியன் டாலர் உதவியைஇந்தியா உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இந்தியா கோரியுள்ளது.
வெள்ளிக்கிழமை இந்தியாவின் பல பகுதிகளிலும் பூகம்பம் ஏற்பட்டது.இதில்கடுமையாக பாதிக்கப்பட்டது குஜராத் மாநிலம் .இந்த பூகம்பத்தில் இதுவரை 30,000பேர் வரை இறந்திருப்பதாக கூறப்படுகிறது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்தில் நிவாரண பணிகளுக்காக 1.5 மில்லியன்டாலர் நிதி உதவி கேட்டு உலகவங்கியுடன் இந்தியா பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான் நாடுகள் குஜராத் நிவாரணத்திற்கு நிதி உதவிசெய்வதாகவும், மீட்புக் குழுக்களை அனுப்பவும் முன் வந்துள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச முன்னேற்ற, மனிதாபினமான அமைப்பு5.5.மில்லியன் டாலர் நிதி உதவி அளிப்பதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
குஜராத் பூகம்பம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்தெரிவிக்கையில், எங்களுக்கு கிடைத்துள்ள ததவலின் படி 20,000 பேர்இறந்திருக்கலாம் என தெரிகிறது. துருக்கியில் 1999-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில்17,000 வரை இறந்து போனார்கள் அதை விட இது அதிகமாகும் என கூறினார்.
குஜராத்தில் இருக்கும் பெரும் தொழிற்சாலைகள் தங்கள் நிறுவனங்கள் பெரிதளவில்சேதமடையவில்லை என கூறியுள்ளனர். திங்கள் கிழமை வணிகச் சந்தை துவங்கும்போது பூகம்ப விளைவுகள் வணிக சந்தையில் தெரியவரும் என வணிக வல்லுனர்கள்கூறுகின்றனர்.
அமெரிக்காவின் பூகோள ஆய்வுப்படி ரிக்டர் அளவு கோலில் 7.9 என்ற அளவில்பதிவாகியிருக்கும்என தெரிய வந்துள்ளது. இந்த பூகம்பம் கடந்த 50 ஆண்டுகளில்இந்தியாவில் ஏற்பட்ட மிகப் பெரும் பூகம்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது
குஜராத்தை புணரமைப்பதற்கு அதிக அளவு நிதி உதவி தேவைப்படும் என மத்தியநிதித்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். அரசு உலகவங்கியிடமிருந்து 1 பில்லியன் டாலரும் ஆசிய மேம்பாட்டு வங்கியிடமிருந்து 500மில்லியன் நிதி உதவியும் கேட்கவிருக்கிறது.
இந்தியாவின் இரண்டாவது பெரும் தொழில் நகரமான குஜராத்தில் ஏற்பட்டுள்ளபூகம்பம் இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடும் என அவர் கூறினார்.
உலக லங்கியின் தலைவர் ஜேம்ஸ் டி வோல்பென்சோன் கூறுகையில், சில நொடிகளில்பெரும் இழப்பை சந்தித்துள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்காக நாங்கள்வருந்துகிறோம். இந்திய அரசுக்கும், பாதிக்கப்பட்ட மக்களும் இந்த நேரத்தில் பக்கபலமாக இருப்போம் என கூறியுள்ளார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications