பூசாரிகள் மாநாட்டில் கருணாநிதி பங்கேற்பாரா?
மதுரை:
தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் 4-வது மாநில மாநாட்டில்,கலந்து கொள்ள தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
இதுகுறித்து மதுரையில், செய்தியாளர்களிடம், பேரவை நிறுன அறங்காவலர் வேதாந்தம் கூறுகையில், மாநாட்டில்,கிராம கோவில் பூசாரிகளின் நீண்ட கால கோரிக்கைகள் குறித்து அலசப்படும். மீண்டும் அக்கோரிக்கைகள்வலியுறுத்தப்படும்.
மாநாட்டில், காஞ்சி காமகோடி பீடாதிதிகள் இருவரும் வருகிறார்கள். இவர்கள் தவிர மத்திய கலாச்சாரம் மற்றும்சுற்றுலாத் துறை அமைச்சர் அனந்த் குமாரும் வருகிறார். தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் அழைப்பு அனுப்பதிட்டமிட்டுள்ளோம்.
கிராம கோவில் பூசாரிகள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞ்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும், 25 வருடம்பணியில் இருப்போருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், இந்துக் கோவில்களை நிர்வகிப்பதற்கு தனி வாரியம்ஆகியவை அமைக்க வேண்டும் என்று கிராம கோவில் பூசாரிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
யு.என்.ஐ.