For Daily Alerts
Just In
சிறுமி சாவு .. பூகம்பம் என மக்கள் பீதி
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே திருத்து என்ற கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ஆறு வயது சிறுமி உயிரிழந்தார்.
திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி ஆயிஷா பீவியின் உறவினர்கள் 3 பேர் காயமடைந்தனர். ஆனல் இடிந்து விழுந்தவீட்டின் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள், பூகம்பம்தான் தாக்கி விட்டது என்று கூறி தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி வாசலில் வந்து நின்றனர்.
பூகம்பம் என்று அஞ்சி இரவு முழுவதும் வீட்டுக்குள்ளேயே செல்லவில்லை. வீடு இடிந்து விழுந்ததில் காயமடைந்த மேலும் 3 பேர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, January 30, 2001, 5:30 [IST]